<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>புதிர்மயம்</title>
	<atom:link href="http://www.puthirmayam.com/main/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.puthirmayam.com/main</link>
	<description>புதிர்களை அவிழ்க்க வாரீகளா?</description>
	<lastBuildDate>Sat, 08 Dec 2012 17:16:41 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>குறுக்கெழுத்து &#8211; 7</title>
		<link>http://www.puthirmayam.com/main/2012/10/crossword-7/</link>
		<comments>http://www.puthirmayam.com/main/2012/10/crossword-7/#comments</comments>
		<pubDate>Fri, 12 Oct 2012 02:13:39 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthirmayam.com/main/?p=142</guid>
		<description><![CDATA[குறுக்கெழுத்து – 7 வெளியிட்டு இருக்கிறேன். போன தடவை கொஞ்சம் கடினமாக இருந்தது என்று நினைக்கிறேன். வழக்கமாக பதிலளிக்கும் நண்பர்கள் பலர் விடை அனுப்பவில்லை. இந்த முறை கொஞ்சம் சுலபமாக கண்டுபிடிக்கும் வகையில் குறிப்புகள் கொடுத்திருக்கிறேன்.]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.puthirmayam.com/main/crossword-7/" title="குறுக்கெழுத்து – 7">குறுக்கெழுத்து – 7</a> வெளியிட்டு இருக்கிறேன். போன தடவை கொஞ்சம் கடினமாக இருந்தது என்று நினைக்கிறேன். வழக்கமாக பதிலளிக்கும் நண்பர்கள் பலர் விடை அனுப்பவில்லை. இந்த முறை கொஞ்சம் சுலபமாக கண்டுபிடிக்கும் வகையில் குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthirmayam.com/main/2012/10/crossword-7/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குறுக்கெழுத்து &#8211; 6 விடைகளும் விளக்கங்களும்</title>
		<link>http://www.puthirmayam.com/main/2012/10/crossword-6-answers/</link>
		<comments>http://www.puthirmayam.com/main/2012/10/crossword-6-answers/#comments</comments>
		<pubDate>Fri, 12 Oct 2012 02:06:14 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விடைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthirmayam.com/main/?p=136</guid>
		<description><![CDATA[குறுக்கெழுத்து &#8211; 6 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்: குறுக்காக: 4. காற்றாடி நுனிகளை கரம் நடுவில் வைத்து முட்கள் சுற்றுவது (5) விடை: கடிகாரம் விளக்கம்: &#8216;காற்றாடி நுனிகள்&#8217; = &#8216;கா&#8217;, &#8216;டி&#8217;.'கரம்&#8217; நடுவில் வைத்தால் &#8216;கடிகாரம்&#8217;. 5. பாதிக் குடத்தில் புகலிடம் (3) விடை: திக்கு விளக்கம்: &#8216;பாதிக் குடத்தில்&#8217; &#8216;திக்கு&#8217; மறைந்து வருகிறது. &#8216;புகலிடம்&#8217; என்ற பொருளில் வருகிறது. 7. முதல்வர் வருவாய் அறிய விருப்பம் (2) விடை: அவா விளக்கம்: &#8216;முதல்வர்&#8217; = <a href='http://www.puthirmayam.com/main/2012/10/crossword-6-answers/'>[...]</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.puthirmayam.com/main/crossword-6/" title="குறுக்கெழுத்து – 6">குறுக்கெழுத்து &#8211; 6</a> புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்:</p>
<p><strong>குறுக்காக:</strong><br />
4. காற்றாடி நுனிகளை கரம் நடுவில் வைத்து முட்கள் சுற்றுவது (5)<br />
விடை: கடிகாரம்<br />
விளக்கம்: &#8216;காற்றாடி நுனிகள்&#8217; = &#8216;கா&#8217;, &#8216;டி&#8217;.'கரம்&#8217; நடுவில் வைத்தால் &#8216;கடிகாரம்&#8217;.</p>
<p>5. பாதிக் குடத்தில் புகலிடம் (3)<br />
விடை: திக்கு<br />
விளக்கம்: &#8216;பாதிக் குடத்தில்&#8217; &#8216;திக்கு&#8217; மறைந்து வருகிறது. &#8216;புகலிடம்&#8217; என்ற பொருளில் வருகிறது.</p>
<p>7. முதல்வர் வருவாய் அறிய விருப்பம் (2)<br />
விடை: அவா<br />
விளக்கம்: &#8216;முதல்வர்&#8217; = &#8216;அ&#8217; (முதல் எழுத்து). &#8216;வருவாய்&#8217; = &#8216;வா&#8217;.</p>
<p>9. முறையாகக் கல்லாத அறிவு பெற அறிவியல் மெய்யின்றி முதலில் வினவு (3, 3)<br />
விடை: கேள்வி ஞானம்<br />
விளக்கம்: &#8216;அறிவியல்&#8217; = &#8216;விஞ்ஞானம்&#8217;, &#8216;மெய்யின்றி&#8217; => &#8216;விஞானம்&#8217;, &#8216;வினவு&#8217; = &#8216;கேள்&#8217;.</p>
<p>10. சிவந்தது நித்தம் தம்மை விட்டுக் கலங்கி இடை மாறிச் சென்றது (6)<br />
விடை: செந்நிறத்து<br />
விளக்கம்: &#8216;நித்தம்&#8217;-'தம்&#8217;(தம்மை விட்டு)=&#8217;நித்&#8217;. &#8216;சென்றது&#8217;=>&#8217;செந்றது&#8217; (இடை(யினம்) மாறி). &#8216;நித்&#8217; + &#8216;செந்றது&#8217; -> கலங்கி -> செந்நிறத்து. &#8216;சிவந்த&#8217; என்ற பொருளில் வருகிறது.</p>
<p>11. சிறு வயதில் செய்ய வேண்டியது அரிசியிலும் வருமோ? (2)<br />
விடை: கல்<br />
விளக்கம்: &#8216;இளமையில் கல்&#8217;</p>
<p>12. காத்திரு, பின்னர் மசி, உலகத்தை ஆளத் தேவையானது (3)<br />
விடை: பொறுமை<br />
விளக்கம்: &#8216;காத்திரு&#8217; = &#8216;பொறு&#8217;, &#8216;மசி&#8217; = &#8216;மை&#8217;. &#8216;பொறுத்தார் பூமி ஆழ்வார்&#8217;.</p>
<p>13. படைப்பவன் முதல் தலையெழுத்தைக் குழப்பியது அருமை (5)<br />
விடை: பிரமாதம்<br />
விளக்கம்: &#8216;படைப்பவன்&#8217; = &#8216;பிரம்மா&#8217;, &#8216;முதல் தலையெழுத்து&#8217; = &#8216;த&#8217;. &#8216;பிரம்மா&#8217; + &#8216;த&#8217;-> குழப்பி -> &#8216;பிரமாதம்&#8217;. &#8216;அருமை&#8217; என்ற பொருளில் வருகிறது. </p>
<p><strong>நெடுக்காக:</strong><br />
1. அரசன் முடியோர நுனி (2)<br />
விடை: &#8216;கோடி&#8217;<br />
விளக்கம்: &#8216;அரசன்&#8217; = &#8216;கோ&#8217;. &#8216;முடி ஒரம்&#8217; = &#8216;டி&#8217;. &#8216;நுனி&#8217; என்ற பொருளில் வருகிறது.</p>
<p>2. முதல்வருடன் தலைகள் வீழும்படி யாரங்கே குற்றம் செய்தது? முதலில் மேடையில் நிறுத்துவதுதான் சரி!  (7)<br />
விடை: அரங்கேற்றம்<br />
விளக்கம்: &#8216;முதல்வர்&#8217; = &#8216;அ&#8217; + &#8216;யாரங்கே குற்றம்&#8217; &#8211; &#8216;யா&#8217; &#8211; &#8216;கு&#8217; (தலைகள் வீழும்படி) = &#8216;அரங்கேற்றம்&#8217;. &#8216;முதலில் மேடையில் நிறுத்துவது&#8217; என்ற பொருளில் வருகிறது.</p>
<p>3. வீண் செலவில்லாமல் மாட்டிக்கொள்ள நடுவில் பாரமா? (6)<br />
விடை: சிக்கனமாக<br />
விளக்கம்: &#8216;மாட்டிக்கொள்ள&#8217; = &#8216;சிக்க&#8217;. &#8216;பாரமா&#8217; = &#8216;கனமா&#8217;.</p>
<p>6. ரசமாக விலகிய விவாகரத்து சமாசாரம் குழப்பத்தில் பூட்டின் நுழைவாயில் (7)<br />
விடை: சாவித்துவாரம்<br />
விளக்கம்: &#8216;விவாகரத்து&#8217; + &#8216;சமாசாரம்&#8217; &#8211; &#8216;ரசமாக&#8217; -> குழப்பத்தில் -> &#8216;சாவித்துவாரம்&#8217;. &#8216;பூட்டின் நுழைவாயில் என்ற பொருளில் வருகிறது.</p>
<p>8. வருடம் ஐம்பத்தியிரண்டு முறை (6)<br />
விடை: வாரந்தோறும்</p>
<p>14. நாணயத்தின் ஒரு புறம் சிறப்பு (2)<br />
விடை: தலை<br />
விளக்கம்: ரூபா நாணயத்தில் இரு பக்கங்கள் -> பூ/தலை. &#8216;தலை&#8217; என்றால் &#8216;சிறப்பு&#8217; என்று ஒரு பொருள் உண்டு.  </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthirmayam.com/main/2012/10/crossword-6-answers/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குறுக்கெழுத்து &#8211; 5 விடைகளும் விளக்கங்களும்</title>
		<link>http://www.puthirmayam.com/main/2012/09/crossword-5-answers/</link>
		<comments>http://www.puthirmayam.com/main/2012/09/crossword-5-answers/#comments</comments>
		<pubDate>Sat, 15 Sep 2012 17:28:30 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விடைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthirmayam.com/main/?p=125</guid>
		<description><![CDATA[குறுக்கெழுத்து &#8211; 5 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்: குறுக்காக: 1. கசடற முடிக்காமல் பாகிரதி பாதி கலைய சுசீலாவுக்கு ஜானகி (2, 3) விடை: சக பாடகி விளக்கம்: &#8216;கசட&#8217; + &#8216;பாகி&#8217; (பாகிரதியில் பாதி) கலைய 4. தெய்வப் புலவருடைய முதலின் முடிவு உருண்டையானது (3) விடை: உலகு விளக்கம்: தெய்வப் புலவர் = திருவள்ளுவர். முதல் குறள் &#8216;உலகு&#8217; என்று முடியும். 6. முழுமையான குரலில் யார் தலையை வார நடுவில் வைக்க (3) <a href='http://www.puthirmayam.com/main/2012/09/crossword-5-answers/'>[...]</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.puthirmayam.com/main/crossword-5/" title="குறுக்கெழுத்து – 5">குறுக்கெழுத்து &#8211; 5</a> புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்:<br />
<strong>குறுக்காக:</strong><br />
1. கசடற முடிக்காமல் பாகிரதி பாதி கலைய சுசீலாவுக்கு ஜானகி (2, 3)<br />
விடை: சக பாடகி<br />
விளக்கம்: &#8216;கசட&#8217; + &#8216;பாகி&#8217; (பாகிரதியில் பாதி) கலைய<br />
4. தெய்வப் புலவருடைய முதலின் முடிவு உருண்டையானது (3)<br />
விடை: உலகு<br />
விளக்கம்: தெய்வப் புலவர் = திருவள்ளுவர். முதல் குறள் &#8216;உலகு&#8217; என்று முடியும்.<br />
6. முழுமையான குரலில் யார் தலையை வார நடுவில் வைக்க (3)<br />
விடை: வாயார<br />
விளக்கம்: &#8216;யார் தலை&#8217; = &#8216;யா&#8217;. &#8216;வார&#8217; நடுவில் வைத்தால் &#8216;முழுமையான குரலில்&#8217; என்ற பொருளில் வரும்.<br />
7. பரமபதம் தறுதலை விட்டுப் பொட்டுடன் சுற்றி விளையாடுவது (5)<br />
விடை: பம்பரம்<br />
விளக்கம்: &#8216;தறுதலை&#8217; = &#8216;த&#8217;. &#8216;பரமபதம்&#8217; &#8211; &#8216;த&#8217; = &#8216;பரமபம்&#8217;. &#8216;ம&#8217;-வுக்கு ஒரு பொட்டு வைத்து சுற்றினால்  &#8216;பம்பரம்&#8217;.<br />
8. மாலை பின்னல் தலையில் பிள்ளையார் சுழியிடு (4)<br />
விடை: ஆரம்பி<br />
விளக்கம்: &#8216;மாலை&#8217; = &#8216;ஆரம்&#8217;. &#8216;பின்னல் தலை&#8217; = &#8216;பி&#8217;.<br />
9. கோபுர வீட்டு முதல்வர்களை விலக்கித் திருப்பு (4)<br />
விடை: புரட்டு<br />
விளக்கம்: &#8216;கோபுர வீட்டு&#8217; &#8211; &#8216;கோ&#8217; &#8211; &#8216;வீ&#8217; (முதல்வர்கள் &#8211; முதல் எழுத்துக்கள்) = &#8216;புரட்டு&#8217;. &#8216;திருப்பு&#8217; என்ற பொருளில் வரும்.<br />
12. தேசம் பாதி கடந்து குழம்பியும் நம்பிக்கையில்லை (5)<br />
விடை: சந்தேகம்<br />
விளக்கம்: &#8216;தேசம்&#8217; + &#8216;கந்&#8217; (பாதி கடந்து) குழப்பினால் &#8216;சந்தேகம்&#8217;.<br />
14. இரயிலோடும் ஓசையில் பாதி மாட்டிக்கொள் (3)<br />
விடை: சிக்கு<br />
விளக்கம்: &#8216;இரயிலோடும் ஓசை&#8217; = &#8216;சிக்கு புக்கு&#8217;. அதில் பாதி &#8216;சிக்கு&#8217;. &#8216;மாட்டிக்கொள்&#8217; என்ற பொருளில் வரும்.<br />
16. ஆறு முடியும் இடத்தை அறியக் கொண்டை ஒரு வகை (3)<br />
விடை: கடலை<br />
விளக்கம்: ஆறு முடிவது கடலில். கொண்டைக்கடலை ஒரு வகைக் கடலை.<br />
17. சமணத்தில் ஒரு பிரிவு நாத்திகம் பரப்பியதா? (5)<br />
விடை: திகம்பர<br />
விளக்கம்: &#8216;நாத்திகம் பரப்பியதா&#8217;-வில் &#8216;திகம்பர&#8217; ஒளிந்திருக்கிறது. இது சமணத்தில் ஒரு பிரிவு.</p>
<p><strong>நெடுக்காக:</strong></p>
<p>1. சென்னை ஆட்டோ பயணம் குலுக்கி வீழ்ச்சியா? (3)<br />
விடை: சரிவா<br />
விளக்கம்: &#8216;சென்னை ஆட்டோ பயணம்&#8217; = &#8216;சவாரி&#8217;. அது குலுங்கினால் &#8216;சரிவா&#8217;. &#8216;வீழ்ச்சியா&#8217; என்ற பொருளில் வரும்.<br />
2. பாயசம் இடையில்லாமல் கொடுக்க பளபள திரவம் (5)<br />
விடை: &#8216;பாதரசம்&#8217;<br />
விளக்கம்: &#8216;பாயசம்&#8217; &#8211; &#8216;ய&#8217; (இடையெழுத்து இல்லாமல்) _ &#8216;தர&#8217; (கொடுக்க).<br />
3. கௌரவ ஆசிரியர் நீர் பருகி திரும்ப (4)<br />
விடை: கிருபர்<br />
விளக்கம்: &#8216;நீர் பருகி&#8217;-யில் &#8216;கிருபர்&#8217; மறைந்திருக்கிறது. கௌரவர்களின் ஆசிரியர் கிருபர்.<br />
4. உன் தலை பழுப்பது பழுதில்லாமல் பெருக்க (3)<br />
விடை: உப்ப<br />
விளக்கம்: &#8216;உ&#8217; (&#8216;உன்&#8217; தலை) + &#8216;பழுப்பது&#8217; &#8211; &#8216;பழுது&#8217; = &#8216;உப்ப&#8217;. &#8216;பெருக்க&#8217; என்ற பொருளில் வரும்.<br />
5. முடிவுக்கு வராமல் இரு, பழ நுனியுடன் வணங்கு (5)<br />
விடை: குழம்பிடு<br />
விளக்கம்: &#8216;ழ&#8217; (&#8216;பழ&#8217; நுனி) + &#8216;கும்பிடு&#8217; (வணங்கு).<br />
8. பசு கவிதையில்லாமல் பாசமாகவே கலந்தது வெறியுடன் (5)<br />
விடை: ஆவேசமாக<br />
விளக்கம்: &#8216;ஆ&#8217; (பசு) + &#8216;பாசமாகவே&#8217;  &#8211; &#8216;பா&#8217; (கவிதையில்லாமல்).<br />
10. கயவன் பாதி தலையுடன் கலந்து வந்தது யாரும் அறியாதது (5)<br />
விடை: &#8216;ரகசியம்&#8217;<br />
விளக்கம்: &#8216;கய&#8217; (கயவன் பாதி) + &#8216;சிரம்&#8217; (தலை) கலந்தால் &#8216;ரகசியம்&#8217;. &#8216;யாரும் அறியாதது&#8217; என்ற பொருளில் வரும்.<br />
11. கயிலைவாசி மயங்கும் ராகம் இடை கட்டு நீங்கி காதில் போகட்டும் (4)<br />
விடை: காம்போதி<br />
விளக்கம்: &#8216;காதில் போகட்டும்&#8217; &#8211; &#8216;கட்டு&#8217; &#8211; &#8216;ல்&#8217; (இடையெழுத்து). இராவணன் காம்போதி ராகத்தால் சிவனை மயக்கியதாக புராணம்.<br />
13. இதன் வாழ்க்கைப் பயணம் வடிகட்டி வரை (3)<br />
விடை: தேயிலை<br />
15. வெப்பம் தணிய வார இறுதி வருமுன் நீராடு (3)<br />
விடை: குளிர<br />
விளக்கம்: &#8216;குளி&#8217; (நீராடு) + &#8216;ர&#8217; (வார இறுதி). &#8216;வெப்பம் தணிய&#8217; என்ற பொருளில் வரும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthirmayam.com/main/2012/09/crossword-5-answers/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குறுக்கெழுத்து &#8211; 4 விடைகளும் விளக்கங்களும்</title>
		<link>http://www.puthirmayam.com/main/2012/05/crossword-4-answers/</link>
		<comments>http://www.puthirmayam.com/main/2012/05/crossword-4-answers/#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 23:13:09 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விடைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthirmayam.com/main/?p=109</guid>
		<description><![CDATA[குறுக்கெழுத்து &#8211; 4 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்: குறுக்காக: 5.போன பிறவித் தொடர்பு அறிய இருட்டறை இரண்டு விட்டு குவி (5) விடை: விட்டகுறை விளக்கம்: இருட்டறை &#8211; இரு (இரண்டு விட்டு) + குவி 6.அருகே மூன்றாவதின் திறப்பைத் தாங்க முடியாது (2) விடை: கண் விளக்கம்: மூன்றாவது &#8211; சிவனின் நெற்றிக்கண்; &#8216;அருகே&#8217; என்ற மற்றொரு பொருளிலும் வருகிறது 7.பிராமண வீட்டில் உனக்கு என்ன பார்வை (3) விடை: நோக்கு விளக்கம்: பிராமண வழக்கில் <a href='http://www.puthirmayam.com/main/2012/05/crossword-4-answers/'>[...]</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.puthirmayam.com/main/crossword-4/" title="குறுக்கெழுத்து – 4">குறுக்கெழுத்து &#8211; 4</a> புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்:<br />
<strong>குறுக்காக:</strong><br />
5.போன பிறவித் தொடர்பு அறிய இருட்டறை இரண்டு விட்டு குவி (5)<br />
விடை: விட்டகுறை<br />
விளக்கம்: இருட்டறை &#8211; இரு (இரண்டு விட்டு) + குவி<br />
6.அருகே மூன்றாவதின் திறப்பைத் தாங்க முடியாது (2)<br />
விடை: கண்<br />
விளக்கம்: மூன்றாவது &#8211; சிவனின் நெற்றிக்கண்; &#8216;அருகே&#8217; என்ற மற்றொரு பொருளிலும் வருகிறது<br />
7.பிராமண வீட்டில் உனக்கு என்ன பார்வை (3)<br />
விடை: நோக்கு<br />
விளக்கம்: பிராமண வழக்கில் &#8216;நோக்கு&#8217; என்பது &#8216;உனக்கு&#8217; என்ற பொருளில் வரும். &#8216;பார்வை&#8217; என்ற பொருளிலும் வரும்.<br />
8.பத்மா காலின்றி தடையோடு சுற்றுவது பாயா ஊரா? இரண்டும்தான் (5)<br />
விடை: பத்தமடை<br />
விளக்கம்: &#8216;பத்மா&#8217; காலின்றி = &#8216;பத்ம&#8217; +&#8217;தடை&#8217; = பத்தமடை. பாய்களுக்குப் பெயர் போன ஊர்.<br />
11.எதை சுற்ற தந்தம் தலை விட்டுப் பெற்றவர் (2, 3)<br />
விடை: எம் தந்தை<br />
விளக்கம்: &#8216;எதை&#8217; + &#8216;தந்தம்&#8217; &#8211; &#8216;த&#8217; (தந்தம் என்பதில் தலை) = &#8216;எம் தந்தை&#8217;. &#8216;பெற்றவர்&#8217; என்ற பொருளில் வருகிறது.<br />
12.புல்லா சைவத்திற்கு எதிராக மாறியது? (3)<br />
விடை: புலால்<br />
14.இதன் வருகையில் ஆபத்து தலையை விட்டுப் பறந்துவிடும் (2)<br />
விடை: பசி<br />
விளக்கம்: பசி வந்தால் பத்தும் (ஆபத்து தலையை விட்டால் பத்து) பறந்து போகும்.<br />
15.வையாமல் கானா நடுவில் வந்தாலும் இனிப்பு அலுக்காது (5)<br />
விடை: திகட்டாமல்<br />
விளக்கம்: வையாமல் = திட்டாமல். நடுவே &#8216;க&#8217; வந்தால் &#8216;திகட்டாமல்&#8217;.<br />
<strong>நெடுக்காக:</strong><br />
1.ஈரம் தலைவனின்றி தவிக்க ஈரம் (6)<br />
விடை: ஈவிரக்கம்<br />
விளக்கம்: &#8216;ஈரம்&#8217; + &#8216;விக்க&#8217; (தவிக்க தலைவனின்றி) = &#8216;ஈவிரக்கம்&#8217;. &#8216;ஈரம்&#8217; என்ற பொருளிலும் வருகிறது.<br />
2.முன்னாள் முதல்வரின் மூச்சிருந்த இடம்? (3)<br />
விடை: கடமை<br />
விளக்கம்: &#8216;மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்&#8230;கடமை அது கடமை..&#8217; என்பது ஒரு எம்.ஜி.ஆர் படப் பாடல்.<br />
3.வைகறையில் யோசித்தும் யோகமின்றிக் கலைத்துக் காவலில் போட்டு (2, 3)<br />
விடை: சிறை வைத்து<br />
விளக்கம்: &#8216;வைகறை&#8217; +&#8217;யோசித்தும்&#8217; &#8211; &#8216;யோகம்&#8217; -> கலந்தால் &#8216;சிறை வைத்து&#8217;. &#8216;காவலில் போட்டு&#8217; என்ற பொருளில் வருகிறது.<br />
4.சுந்தரர் சுமந்தது மண்டைக்குள் முதலில் கூவ (2,2)<br />
விடை: மண் கூடை<br />
விளக்கம்: &#8216;மண்டை&#8217;க்குள் &#8216;கூவ&#8217;வின் முதல் எழுத்து நுழைய &#8216;மண் கூடை&#8217; வருகிறது. மதுரை சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்ததாக ஐதீகம்.<br />
9.கந்தர் வாகனம் நெல் வகை சேர்ந்து ஊர் (6)<br />
விடை: மயிலாடுதுறை<br />
விளக்கம்: &#8216;மயில்&#8217; (கந்தர் வாகனம்) + &#8216;ஆடுதுறை&#8217; (நெல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஊரில் இருக்கிறது) = மயிலாடுதுறை<br />
10.தாயாதி கொஞ்சம் அந்நிய அபிராமியைப் பாடியதா? (5)<br />
விடை: அந்தாதியா<br />
விளக்கம்: &#8216;தாயாதி&#8217; + &#8216;அந்&#8217; (கொஞ்சம் அந்நிய) = &#8216;அந்தாதியா&#8217;. &#8216;அபிராமி அந்தாதி&#8217; என்பது ஒரு புகழ்பெற்ற பாடல்.<br />
11.எது நடுவில் கனிவாய் திரும்ப எண் (4)<br />
விடை: எழுபது<br />
விளக்கம்: &#8216;எது&#8217; நடுவில் &#8216;பழு&#8217; (கனிவாய்) திரும்பி வந்து &#8216;எழுபது&#8217; என்ற எண் ஆனது.<br />
13.ஆபரணம் பொட்டுக்கு மேல் குறிப்பிட்டு (3)<br />
விடை: சுட்டி<br />
விளக்கம்: பெண்கள் நெற்றியில் அணியும் ஆபரணம் = &#8216;சுட்டி&#8217;. &#8216;குறிப்பிட்டு&#8217; என்ற பொருளிலும் வருகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthirmayam.com/main/2012/05/crossword-4-answers/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குறுக்கெழுத்து &#8211; 3 விடைகளும் விளக்கங்களும்</title>
		<link>http://www.puthirmayam.com/main/2012/04/crossword-3-answers/</link>
		<comments>http://www.puthirmayam.com/main/2012/04/crossword-3-answers/#comments</comments>
		<pubDate>Thu, 05 Apr 2012 03:00:19 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விடைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthirmayam.com/main/?p=83</guid>
		<description><![CDATA[குறுக்கெழுத்து – 3 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும். குறுக்காக: 1.அகர முதலாக மந்திரவாதி செய்வதா? வேண்டியதா? (5) விடை: அவசியமா விளக்கம்: &#8216;அ&#8217; (அகர முதலாக) + &#8216;வசியமா&#8217; (மந்திரவாதி செய்வதா) 4.அரை பேனாவின் உயிர் (2) விடை: மசி விளக்கம்: மசி = அரை (அரைத்தல்) 6.போன மாத நடுவில் திரும்பி பாதி விம்மல் சூழ ஒரு பறவை? (4) விடை: விமானம் விளக்கம்: &#8216;போன மாத&#8217; &#8211; நடுவில் திரும்பி இருப்பது &#8216;மான&#8217;. &#8216;விம்&#8217; <a href='http://www.puthirmayam.com/main/2012/04/crossword-3-answers/'>[...]</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.puthirmayam.com/main/crossword-3/" title="குறுக்கெழுத்து – 3">குறுக்கெழுத்து – 3</a> புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்.<br />
<strong>குறுக்காக:</strong><br />
1.அகர முதலாக மந்திரவாதி செய்வதா? வேண்டியதா? (5)<br />
விடை: அவசியமா<br />
விளக்கம்: &#8216;அ&#8217; (அகர முதலாக) + &#8216;வசியமா&#8217; (மந்திரவாதி செய்வதா)<br />
4.அரை பேனாவின் உயிர் (2)<br />
விடை: மசி<br />
விளக்கம்: மசி = அரை (அரைத்தல்)<br />
6.போன மாத நடுவில் திரும்பி பாதி விம்மல் சூழ ஒரு பறவை? (4)<br />
விடை: விமானம்<br />
விளக்கம்: &#8216;போன மாத&#8217; &#8211; நடுவில் திரும்பி இருப்பது &#8216;மான&#8217;. &#8216;விம்&#8217; = பாதி விம்மல்.<br />
7.இக்கரை ஓரத்தை விட்டு 9-இல் ஒன்று இடையில் திறந்து மூட (4)<br />
விடை: இமைக்க<br />
விளக்கம்: &#8216;இக்கரை&#8217; ஓரத்தை விட்டால் &#8216;இக்க&#8217;. 9 குறுக்காக விடையில் முதல் வார்த்தை &#8216;மை&#8217;. &#8216;இக்க&#8217;-வின் இடையில் &#8216;மை&#8217; சேர்ந்தால் &#8216;இமைக்க&#8217;.<br />
9.உரை தன்மையாக உன்னை விட்டுக் கலங்கினாலும் கண்ணழகு கெடாமல் (1, 4)<br />
விடை: மை கரையாமல்<br />
விளக்கம்: &#8216;உரை தன்மையாக&#8217; &#8211; &#8216;உன்&#8217; (உன்னை விட்டு)<br />
12.நூறு வென்றதால் தலையிழந்த 6-ஐக் காக்க 3 வேண்டியவள் (4)<br />
விடை: பாஞ்சாலி<br />
விளக்கம்: &#8216;மானம்&#8217; = தலையிழந்த &#8216;விமானம்&#8217; (6 குறுக்காக). கௌரவர்கள் (நூறு பேர்) சூதாட்டத்தில் வென்றதால் &#8216;மானம்&#8217; காக்க &#8216;மாலை&#8217; (3 நெடுக்காக) (திருமாலை) வேண்டியவள்.<br />
14.குரங்கும் களிறும் கலந்த ஆட்டம் முடிந்தது இவ்வாறு (4)<br />
விடை: வினையாக<br />
விளக்கம்: &#8216;கவி&#8217; = குரங்கு. &#8216;யானை&#8217; = களிறு. விளையாட்டு முடிவது வினையாக.<br />
17.வேலோடு சேர்ந்து ஈறு கெடாமல் செய்யுமோ? (2)<br />
விடை: ஆல்<br />
விளக்கம்: ஆலும் வேலும் பல்லுக்குறுதி<br />
18.தீப நுனி தலையிழந்து முற்ற நடுவில் சுற்றும் ஆசையில்லாமல் (5)<br />
விடை: பற்றற்று<br />
விளக்கம்: &#8216;ப&#8217; (தீப நுனி) + &#8216;ற்ற&#8217; (தலையிழந்து பற்ற) + &#8216;ற்று&#8217; (நடுவில் சுற்றும்). ஆசையில்லாமல் என்ற பொருளில் வருகிறது.<br />
<strong>நெடுக்காக:</strong><br />
1.குருவிடம் உயிருடன் குடம் எடுத்து நீர் கொட்டுவது (3)<br />
விடை: அருவி<br />
விளக்கம்: &#8216;குருவிடம்&#8217; &#8211; &#8216;குடம்&#8217; (குடம் எடுத்து) = &#8216;ருவி&#8217; + &#8216;அ&#8217; (உயிர் எழுத்து)<br />
2.தந்தை மறுமணம் செய்ததால் வந்த நோய்? (5)<br />
விடை: சின்னம்மை<br />
விளக்கம்: சின்னம்மை = சிற்றன்னை<br />
3.ஒரு வேளை அணிவது (2)<br />
விடை: மாலை<br />
4.உம்மை விட்டு உயிர் நீங்கி வேறுயிர் சேர்வது சரியா நேரெதிரா? (3)<br />
விடை: மறுமை<br />
விளக்கம்: உயிர் விட்டு வேறுயிர் சேர்வது = மறுமை. &#8216;உம்மை&#8217; &#8211; &#8216;உ&#8217; + &#8216;இ&#8217; = &#8216;இம்மை&#8217; = மறுமையின் நேரெதிர்.<br />
5.சோக ராகம் காலின்றி தாவ கடை நடுவில் போக்கிடம் (4)<br />
விடை: முகவரி<br />
விளக்கம்: முகாரி = சோக ராகம், காலின்றி = &#8216;முகரி&#8217;. &#8216;தாவ கடை&#8217; (கடைசியில்) = &#8216;வ&#8217; போக்கிடம் என்ற பொருளில் வருகிறது.<br />
7.இணங்காத சங்கீதமா? (3)<br />
விடை: இசையா<br />
8.சூழ்ச்சி நடுவில் தேர் கொடுத்தவன் திரும்பி வர அரையில் கால் (4)<br />
விடை: சரிபாதி<br />
விளக்கம்: சூழ்ச்சி = &#8216;சதி&#8217;. தேர் கொடுத்தவன் = &#8216;பாரி&#8217;. &#8216;சதி&#8217; நடுவில் &#8216;பாரி&#8217; திரும்பி &#8216;ரிபா&#8217;வந்தால் &#8216;சரிபாதி&#8217;. அரையில் கால் சரிபாதி தானே.<br />
10.கலிப்பாவில் மெய்மறந்த மயிலை வாசி (3)<br />
விடை: கபாலி<br />
விளக்கம்: &#8216;கலிப்பா&#8217; &#8211; &#8216;ப்&#8217; (மெய் மறந்து) = &#8216;கபாலி&#8217;<br />
11.மன்றம் தனை மெய் நீங்கக் கலங்கி நினைவிழ (3, 2)<br />
விடை: தன்னை மற<br />
விளக்கம்: &#8216;மன்றம் தனை&#8217; &#8211; &#8216;ம்&#8217; (மெய் நீங்க) = &#8216;மன்றதனை&#8217; கலங்கினால் &#8216;தன்னை மற&#8217;. &#8216;நினைவிழ&#8217; என்ற பொருளில் வருகிறது.<br />
13.நெடுக்காக 1 தருவதை இடையில் இடை மாற்றத் தெரியும் சாடை (3)<br />
விடை: சாயல்<br />
விளக்கம்: நெடுக்காக ௧ = &#8216;அருவி&#8217;. அது தருவது &#8216;சாரல்&#8217;. &#8216;சாரல்&#8217; &#8211; &#8216;ர&#8217; + &#8216;ய&#8217; (இடையில் வரும் இடையினத்தை மற்றொரு இடையினத்தால் மாற்ற) = &#8216;சாயல்&#8217;. &#8216;சாடை&#8217; என்ற போருளிக் வருகிறது.<br />
15.முதிர் முதிராத மரம் (3)<br />
விடை: கன்று<br />
16.மங்கள மிருகம் திரும்ப (2)<br />
விடை: சுப<br />
விளக்கம்: &#8216;பசு&#8217; திரும்பினால் &#8216;சுப&#8217;. &#8216;மங்கள&#8217; என்ற பொருளில் வருகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthirmayam.com/main/2012/04/crossword-3-answers/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குறுக்கெழுத்து &#8211; 2 விடைகளும் விளக்கங்களும்</title>
		<link>http://www.puthirmayam.com/main/2012/02/crossword-2-answers/</link>
		<comments>http://www.puthirmayam.com/main/2012/02/crossword-2-answers/#comments</comments>
		<pubDate>Sun, 26 Feb 2012 19:06:12 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விடைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthirmayam.com/main/?p=62</guid>
		<description><![CDATA[குறுக்கெழுத்து &#8211; 2 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்: குறுக்காக: 4.பாதி மருந்துடன் உண்டாகி சிவந்த காரணம் (5) விடை: மருதோன்றி விளக்கம்: &#8216;மரு&#8217; = பாதி மருந்து; &#8216;தோன்றி&#8217; = &#8216;உண்டாகி&#8217;; மருதோன்றி (மருதாணி) = சிவந்த காரணம் 5.சக்கரக் கிழங்கு (3) விடை: உருளை விளக்கம்: உருளை = சக்கரம் / உருளைக்கிழங்கு 7.அமெரிக்கத் தலைவர் தலை தப்ப நரகாசுரன் தலை சாய உதவினாள் (2) விடை: பாமா விளக்கம்: அமெரிக்கத் தலைவர் = &#8216;ஒபாமா&#8217;; <a href='http://www.puthirmayam.com/main/2012/02/crossword-2-answers/'>[...]</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.puthirmayam.com/main/crossword-2/" title="குறுக்கெழுத்து – 2">குறுக்கெழுத்து &#8211; 2</a> புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்:<br />
<strong>குறுக்காக:</strong><br />
4.பாதி மருந்துடன் உண்டாகி சிவந்த காரணம் (5)<br />
விடை: மருதோன்றி<br />
விளக்கம்: &#8216;மரு&#8217; = பாதி மருந்து; &#8216;தோன்றி&#8217; = &#8216;உண்டாகி&#8217;; மருதோன்றி (மருதாணி) = சிவந்த காரணம்<br />
5.சக்கரக் கிழங்கு (3)<br />
விடை: உருளை<br />
விளக்கம்: உருளை = சக்கரம் / உருளைக்கிழங்கு<br />
7.அமெரிக்கத் தலைவர் தலை தப்ப நரகாசுரன் தலை சாய உதவினாள் (2)<br />
விடை: பாமா<br />
விளக்கம்: அமெரிக்கத் தலைவர் = &#8216;ஒபாமா&#8217;; தலை தப்பினால் &#8216;ஒபாமா&#8217; &#8211; &#8216;ஒ&#8217; = &#8216;பாமா&#8217;; கிருஷ்ணருடன் சேர்ந்து பாமாவும் நரகாசுரனுடன் போரிட்டதாகக் கதை.<br />
9.கண்ணன் வாத்தியம் புழல் இழந்து பழி வாங்கும் விளையாட்டு (6)<br />
விடை: பல்லாங்குழி<br />
விளக்கம்: &#8216;கண்ணன் வாத்தியம்&#8217; = புல்லாங்குழல்; &#8216;புல்லாங்குழல் &#8211; புழல் + பழி&#8217;= &#8216;பல்லாங்குழி&#8217; (விளையாட்டு)<br />
10.கடை மாறாது பழைய கடையில் &#8216;பழைய&#8217; இருப்பது (2, 4)<br />
விடை: ஈறு கெடாமல்<br />
விளக்கம் &#8211; கடை (கடைசி) = ஈறு; மாறாது = கெடாமல்; &#8216;பழைய கடை&#8217; = &#8216;பழைய&#8217; ஈறு கெடாமல் இருக்கும் எச்சம்.<br />
11.வாலில்லாச் சிறுவன் போவது விரைவாக அல்ல (2)<br />
விடை: பைய<br />
விளக்கம்: சிறுவன் = &#8216;பையன்&#8217;; பையன் &#8211; &#8216;ன்&#8217; = &#8216;பைய&#8217; (மெதுவாக)<br />
12.மஞ்சள் பூ அரசனுடன் சேர்த்து ஔவை தந்தது (3)<br />
விடை: கொன்றை<br />
விளக்கம்: அரசன் = &#8216;வேந்தன்&#8217;; &#8216;கொன்றை வேந்தன்&#8217; &#8211; அவ்வை எழுதியது; கொன்றை ஒரு மஞ்சள் நிறப் பூ.<br />
13.காலொடிந்த தாரை முன் பத்தில் ஒன்று இவர்களை நினையான் ஏகப்பத்தினியான் (2,3)<br />
விடை: இரு மாதரை<br />
விளக்கம்: பத்தில் ஒன்று = 1/10 = &#8216;இருமா&#8217;; காலொடிந்த &#8216;தாரை&#8217; = &#8216;தரை&#8217;; &#8216;இப்பிறவிக்கி இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்&#8217; &#8211; கம்ப ராமாயணம். </p>
<p><strong>நெடுக்காக:</strong><br />
1.வாலிழந்த கால வாகனம் உரம் (2)<br />
விடை: எரு<br />
விளக்கம்: &#8216;கால (எம) வாகனம்&#8217; = &#8216;எருமை&#8217;. &#8216;எருமை&#8217; &#8211; &#8216;மை&#8217; = &#8216;எரு&#8217; (உரம்).<br />
2.கூடினால் இரண்டில் பாதி சுட்டால் பசு மாறாட்டம் (3, 4)<br />
விடை: ஒன்று பட்டால்<br />
விளக்கம்: &#8216;இரண்டில் பாதி&#8217; = &#8216;ஒன்று&#8217;; &#8216;பசு மாறாட்டம்&#8217; = &#8216;சு&#8217;-வுக்கு பதில் &#8216;ப&#8217;; &#8216;சுட்டால்&#8217; => &#8216;பட்டால்&#8217;. &#8216;கூடினால்&#8217; என்பதன் பொருள்.<br />
3.முள் குத்தும் உணர்வுடன் கூளத்தின் துணையுடன் இடுப்பில் இதன் இருப்பிடம் (6)<br />
விடை: சுருக்குப்பை<br />
விளக்கம்: &#8216;முள் குத்தும் உணர்வு&#8217; = &#8216;சுருக்&#8217;; &#8216;கூளத்தின் துணை&#8217; = &#8216;குப்பை&#8217;;<br />
6.வேழத்தலை உயிர்விட்டு அமருமா, காலால் கலந்து குமரனைக் கூப்பிடு (2,5)<br />
விடை: வேலா மால்மருகா<br />
விளக்கம்: &#8216;வேழத்தலை&#8217; = &#8216;வே&#8217;; &#8216;அமருமா&#8217; &#8211; &#8216;அ&#8217; (உயிர் விட்டு) = &#8216;மருமா&#8217;; &#8216;வே&#8217; + &#8216;மருமா&#8217; + &#8216;காலால்&#8217; => கலந்தால் விடை வரும்.<br />
8.சிலம்பில் இருக்கும் சொக்கத் தங்கமே (3,3)<br />
விடை: மாசறு பொன்னே<br />
விளக்கம்: &#8216;சொக்கத் தங்கமே&#8217; = &#8216;மாசறு பொன்னே&#8217;; சிலப்பதிகாரத்தில் கோவலன் சொல்வதாக வரும் வரிகள் &#8216;மாசறு பொன்னே, வலம்புரி முத்தே..&#8217;. பின்னர் &#8216;பூம்புகார்&#8217; திரைப்படத்திலும் இந்த வரிகளை வைத்து ஒரு பாடல் வந்தது.<br />
14.மறைத்த விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என்று கவலைப்படு (2)<br />
விடை: தவி<br />
விளக்கம்: &#8216;தவி&#8217; = &#8216;கவலைப்படு&#8217;; &#8216;மறைத்த விஷயம்&#8217; &#8211; இதில் &#8216;தவி&#8217; மறைந்து வருகிறது.</p>
<p><strong>இதுவரை விடை சொன்னவர்கள்</strong><br />
பூங்கோதை<br />
வீ.ஆர்.பாலகிருஷ்ணன்<br />
திருமூர்த்தி<br />
முத்து<br />
பார்த்தசாரதி/அம்ருதா<br />
கே.ஆர். சந்தானம்<br />
நாகராஜன்<br />
10 அம்மா<br />
யோசிப்பவர்<br />
தினேஷ் முகிலன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthirmayam.com/main/2012/02/crossword-2-answers/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குறுக்கெழுத்து &#8211; 1 விடைகளும் விளக்கங்களும்</title>
		<link>http://www.puthirmayam.com/main/2012/02/crossword-1-answers/</link>
		<comments>http://www.puthirmayam.com/main/2012/02/crossword-1-answers/#comments</comments>
		<pubDate>Mon, 13 Feb 2012 03:15:12 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[விடைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthirmayam.com/main/?p=58</guid>
		<description><![CDATA[என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை சென்ற நவம்பரில் வெளியிட்டேன். பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. விடைகளையும் விளக்கங்களையும் இங்கே அளிக்கிறேன். குறுக்காக: 3.நீங்காத முதலுக்கு வாடகை கட்டி நடுவில் குழப்பி யாசிக்கட்டுமா? (1, 4) விடை: கை நீட்டவா விளக்கம்: &#8216;நீங்காத&#8217; வின் முதலெழுத்து &#8216;நீ&#8217; + வாடகை + &#8216;கட்டி&#8217; நடுவில் இருப்பது &#8216;ட்&#8217; &#8211; குழப்பினால் வரும் விடை &#8216;யாசிக்கட்டுமா&#8217; என்ற பொருளில் இருக்கும். 6.பட்டு மெத்தையில் சரிகை வேட்டியுடன் பாதி கட்டில் சுற்றிப் <a href='http://www.puthirmayam.com/main/2012/02/crossword-1-answers/'>[...]</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>என்னுடைய <a href="http://www.puthirmayam.com/main/crossword-1/" title="குறுக்கெழுத்து – 1">முதல் குறுக்கெழுத்துப் புதிரை</a> சென்ற நவம்பரில் வெளியிட்டேன். பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. விடைகளையும் விளக்கங்களையும் இங்கே அளிக்கிறேன். </p>
<p><strong>குறுக்காக:</strong><br />
3.நீங்காத முதலுக்கு வாடகை கட்டி நடுவில் குழப்பி யாசிக்கட்டுமா? (1, 4)<br />
விடை: கை நீட்டவா<br />
விளக்கம்: &#8216;நீங்காத&#8217; வின் முதலெழுத்து &#8216;நீ&#8217; + வாடகை + &#8216;கட்டி&#8217; நடுவில் இருப்பது &#8216;ட்&#8217; &#8211; குழப்பினால் வரும் விடை &#8216;யாசிக்கட்டுமா&#8217; என்ற  பொருளில் இருக்கும்.<br />
6.பட்டு மெத்தையில் சரிகை வேட்டியுடன் பாதி கட்டில் சுற்றிப் படு (4)<br />
விடை: பகட்டு<br />
விளக்கம்: பாதி &#8216;கட்டில்&#8217; = &#8216;கட்&#8217;. அதைச் சுற்றி &#8216;படு&#8217; = பகட்டு. &#8216;பட்டு மெத்தையில் சரிகை வேட்டியுடன்&#8217; இதன் நேர் பொருள்.<br />
7.ஏழு தலை ஏப்பம் விட்டு கடைசியில் வருமோ வாசனை (4)<br />
விடை: மோப்பம்<br />
விளக்கம்: &#8216;ஏழி&#8217;ன் தலை &#8216;ஏ&#8217;. &#8216;ஏப்பம்&#8217; விட்டு &#8216;ஏ&#8217; போனால் &#8216;ப்பம்&#8217;. &#8216;வருமோ&#8217; வின் கடைசி எழுத்து &#8216;மோ&#8217;. &#8216;மோ&#8217; + &#8216;ப்பம்&#8217; = மோப்பம். &#8216;வாசனை&#8217; இதன் நேர் பொருள்.<br />
8.முந்தையவனே இடம்பெயர் இங்கிருந்து (3, 3)<br />
விடை: அண்ணா நகர்<br />
விளக்கம்: &#8216;இங்கிருந்து&#8217; என்பதால் விடை ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும். &#8216;முந்தையவனே&#8217; = &#8216;அண்ணா&#8217;. &#8216;இடம்பெயர்&#8217; = &#8216;நகர்&#8217;<br />
13.அந்த ஆளை உலர வை, பின்னர் கொடியிலிருந்து பறி (6)<br />
விடை: அவரைக்காய்<br />
விளக்கம்: &#8216;அந்த ஆளை&#8217; = &#8216;அவரை&#8217;. &#8216;உலர வை&#8217; = &#8216;காய்&#8217;.<br />
14.பேசும் மொழி தமிழா தெலுங்கா? (4)<br />
விடை: செப்பும்<br />
விளக்கம்: &#8216;பேசும்&#8217; இதன் நேர் பொருள். &#8216;செப்பு&#8217; என்பது தெலுங்கிலும் பயன்படுத்தப் படுகிறது.<br />
15.மயான ஓரங்களில் கொஞ்சம் துயரமா, வருந்துகிறேன் இதயப்பூர்வமாக (4)<br />
விடை: மனமார<br />
விளக்கம்: &#8216;மயான&#8217; ஓரங்களில் இருப்பது &#8216;ம&#8217; + &#8216;ன&#8217;. &#8216;துயரமா&#8217; வில் கொஞ்சம் &#8216;ரமா&#8217;. &#8216;இதயப்பூர்வமாக&#8217; இதன் நேர் பொருள்.<br />
16.யானை வாய் திறக்க ஊஞ்சலோ பாதியில் நிற்க இங்கே வேண்டியது அறிவுரையா? (5)<br />
விடை: ஆலோசனையா<br />
விளக்கம்: &#8216;யானை&#8217; + &#8216;ஆ&#8217; (வாய் திறக்க) + &#8216;ஊஞ்சலோ&#8217; வின் பாதி &#8216;சலோ&#8217;. &#8216;அறிவுரையா&#8217; இதன் நேர் பொருள்.</p>
<p><strong>நெடுக்காக:</strong><br />
1.’ஒன்று ஆறினால் நலம், ஒன்று ஆறாவிட்டால் நலம்’ என்று சீறு. (3, 2)<br />
விடை: கோபம் அடை<br />
விளக்கம்: &#8216;கோபம்&#8217; = ஆறினால் நலம். &#8216;அடை&#8217; = சூடாயிருந்தால் நலம். &#8216;சீறு&#8217; இதன் நேர் பொருள்.<br />
2.வாழைப்பழம் அரை ரூபாயா? சீப்பாக இருக்கிறதே! (5)<br />
விடை: எட்டணாவா<br />
விளக்கம்: &#8216;அரை ரூபாயா&#8217; வின் நேர் பொருள். (மற்ற குறிப்புகள் விடைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்துவிட்டன.)<br />
4.முற்றிய பதநீர் மோர்மிளகாயுடன் சுவைத்தால் வெப்பம் தணிக்கும் (2, 2)<br />
விடை: நீர்மோர்<br />
விளக்கம்: விடை இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது.<br />
5.தென்னாட்டில் காந்தி இருந்த இடம் ஆங்கிலத் தலையைச் சுற்றியதா? (4)<br />
விடை: டர்பன் (Durban)<br />
விளக்கம்: &#8216;தென்னாடு&#8217; = தென்னாப்பிரிக்கா. ஆங்கிலத்தில் Turban தலையில் சுற்றுவது.<br />
9.பார்கவ் வந்ததும் பாமரேனியன் பாய்ந்தது நக்க அல்ல (3)<br />
விடை: கவ்வ<br />
விளக்கம்: விடை &#8216;பார்கவ் வந்ததும்&#8217; என்ற இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது.<br />
10.கானம் நடுவில் மாட்டிக்கொள்ளாது குழம்பியது (5)<br />
விடை: சிக்கானது<br />
விளக்கம்: &#8216;கானம்&#8217; நடுவில் &#8216;ன&#8217; + &#8216;மாட்டிக்கொள்ளாது&#8217; = &#8216;சிக்காது&#8217;. &#8216;குழம்பியது&#8217; இதன் நேர் பொருள்.<br />
11.சுருட்டி வைக்கக் கூடிய கட்டையோ?(5)<br />
விடை: பாய்மரம்<br />
விளக்கம்: &#8216;சுருட்டி வைக்கக் கூடியது&#8217; = &#8216;பாய்&#8217;. கட்டை = &#8216;மரம்&#8217;.<br />
12.அம்புலிக்குப் போனது, ஆம்புலன்சிலும் போகமுடியுமோ? (4)<br />
விடை: அப்போலோ/அப்பலோ<br />
விளக்கம்: நிலவுக்குப் போன விண்கலம். மருத்துவமனையும் கூட.<br />
13.மாமாவை அழைக்கவா விளையாட? ஆனால் பால் சரியில்லையே.. (4)<br />
விடை: அம்மானை<br />
விளக்கம்: &#8216;மாமா&#8217; = &#8216;அம்மான்&#8217;. அம்மானை பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. மாமாவின் பால் ஆண்பால் ஆயிற்றே.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthirmayam.com/main/2012/02/crossword-1-answers/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அப்பாடா..</title>
		<link>http://www.puthirmayam.com/main/2012/02/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be/</link>
		<comments>http://www.puthirmayam.com/main/2012/02/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Sun, 12 Feb 2012 01:38:24 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.puthirmayam.com/main/?p=37</guid>
		<description><![CDATA[ஒரு மாதிரி &#8216;புதிர்மயம்&#8217; தளத்தை ரிலீஸ் பண்ணியாச்சு. நிறைய பேர் ரொம்ப நாளாக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிட்டாங்க. நானும் இதோ பண்ணலாம் இதோ பண்ணலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்துட்டேன். ஒரு ரெண்டு வாரம் முன்னாடி என்னுடைய இரண்டாவது குறுக்கெழுத்துப் புதிரை போட்டு முடிச்சேன். ஆனால் அதை வெளியிடறதுக்கு முன்னாடி தளத்தை சுமாராவானும் ஏதானும் பண்ணியே தீருவதுன்னு ஒரு முடிவு பண்ணினேன். அதன் விளைவாக மும்முரமா கொஞ்சம் வேலை பாத்து வெற்றிகரமா புதிர்மயம் தளத்தையும் என் இரண்டாவது <a href='http://www.puthirmayam.com/main/2012/02/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be/'>[...]</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒரு மாதிரி &#8216;புதிர்மயம்&#8217; தளத்தை ரிலீஸ் பண்ணியாச்சு. நிறைய பேர் ரொம்ப நாளாக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிட்டாங்க. நானும்   இதோ பண்ணலாம் இதோ பண்ணலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்துட்டேன். ஒரு ரெண்டு வாரம் முன்னாடி என்னுடைய இரண்டாவது குறுக்கெழுத்துப் புதிரை போட்டு முடிச்சேன். ஆனால் அதை வெளியிடறதுக்கு முன்னாடி தளத்தை சுமாராவானும் ஏதானும் பண்ணியே தீருவதுன்னு ஒரு முடிவு பண்ணினேன். அதன் விளைவாக மும்முரமா கொஞ்சம் வேலை பாத்து வெற்றிகரமா புதிர்மயம் தளத்தையும் என் <a href="http://www.puthirmayam.com/main/crossword-2/" title="குறுக்கெழுத்து – 2">இரண்டாவது குறுக்கெழுத்துப் புதிரையும் </a>வெளியிடறேன். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.puthirmayam.com/main/2012/02/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
